செய்திகள்
கிறிஸ் கெய்ல்

இன்றைய போட்டியுடன் கிறிஸ் கெய்ல் ஓய்வு?: அவரது ஜெர்சி உணர்த்துவது என்ன?

Published On 2019-08-14 15:04 GMT   |   Update On 2019-08-14 15:04 GMT
கிறிஸ் கெய்ல் அவரது ஜெர்சியில் ‘301’ எண்ணை பொறித்திருப்பதால் இன்றைய போட்டியுடன் ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

வழக்கமாக கிறிஸ் கெய்ல் ‘45’ எண் பொறித்த ஜெர்சிதான் அணிந்து விளையாடுவார். இன்று ‘301’ எண் பொறித்த ஜெர்சியுடன் விளையாடினார். இன்றைய போட்டி அவருக்கு 301-வது ஒருநாள் போட்டியாகும்.

இதனால் இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் 41 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



அவர் ஆட்டமிழந்து வெளியேறும்போது இந்திய வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 333 ரன்கள் அடித்ததை நினைவு  கூறும் வகையில் ‘333’ எண் பொறித்த ஜெர்சி அணிந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News