செய்திகள்
ஜாப்ரா ஆர்சர்

அதிசயம் நிகழ்த்துவேன் என்று எதிர்பார்க்காதீர்கள்: ஜாப்ரா ஆர்சர்

Published On 2019-08-13 12:47 GMT   |   Update On 2019-08-13 12:47 GMT
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இருக்கும் ஜாப்ரா ஆர்சர், எந்த அற்புதங்களும் நிகழ்த்துவேன் என்று எதிர்பார்க்காதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நான்கு ஓவர்கள் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார்.

உலகக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய ஜாப்ரா ஆர்சர் காயத்தால் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. நாளை லார்ட்ஸில் தொடங்கும் 2-வது டெஸ்டில் ஜாப்ரா ஆர்சர் அறிமுகம் ஆகிறார். சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவர், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எந்தவித அதிசயத்தையும் எதிர்பார்க்காதீர்கள் என்று ஜாப்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து ஜாப்ரா ஆர்சர் கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் போட்டிக்கான சிகப்பு பந்தில் அதிகமான போட்டியில் விளையாடவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. அனால், நான் ஒயிட் பந்தில் விளையாடியதை விட ரெட் பந்தில்தான் அதிகமாக விளையாடியுள்ளேன். எப்படி இருந்தாலும் முன்னுரிமை கொடுக்கும் கிரிக்கெட் இதுவாகும்.

ரெட் பந்து போட்டிகள் டிவி-யில் ஒளிபரப்புவது இல்லை. இதனால் ஏராளமான மக்களுக்கு இதுபற்றி தெரியாது. சசக்ஸ் அணிக்காக எனது கிரிக்கெட்டை தொடங்கும்போது முதல் ஆட்டம் ரெல் பந்தில்தான்.



எந்த அதிசயத்தையும் எதிர்பார்க்காதீர்கள் என்பதை நான் திட்டவட்டமாக கூறுவேன். என்னுடைய அறிமுக டெஸ்ட் மிகவும் விரைவில் வந்துள்ளது. ஆடுகளத்தில் களமிறங்கி என்னால் என்ன முடியுமோ, அதை செய்ய வேண்டும். அதிசயம் நடக்கும் வகையில் என்னால் பயிற்சி மேற்கொள்ள இயலாது. அப்படி நடக்க முடியற்சி செய்வேன்.

ஆனால், அதைப்பற்றி சிந்திக்க மாட்டேன். என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். என்னுடைய சிறந்த ஆட்டத்தை மட்டும்தான் வெளிப்படுத்த முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News