செய்திகள்
டுட்டீ சந்த்

விளையாட்டுத்துறைக்கான விருது: ஹர்பஜன் சிங், டுட்டீ சந்த் பெயரை நிராகரித்தது அமைச்சகம்

Published On 2019-07-28 11:54 GMT   |   Update On 2019-07-28 11:54 GMT
ஹர்பஜன் சிங், டுட்டீ சந்த் ஆகியோர் பெயர் விளையாட்டுத்துறைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் அமைச்சகம் அதை நிராகரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். சர்வதேச போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு கேல் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று இந்திய இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அம்மாநிலம் சார்பில் பரிந்து செய்யப்பட்டது.

அதேபோல் ஒடிசாவைச் சேர்ந்த தடகள வீராங்கனையான டுட்டீ சந்தின் பெயர் அம்மாநில சார்பில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் இருவரின் பெயர்களையும் நிராகரித்துள்ளது விளையாட்டுதுறை அமைச்சகர். இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘இவரும் பெயர்களும் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பின்னர் பரிந்துரை செய்யப்பட்டது’’ என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஏப்ரல் 30-ந்தேதியுடன் பரிந்துரைக்கான கெடு முடிந்த நிலையில் பஞ்சாப் அரசு இரண்டு மாதம் கழித்து பரிந்துரை செய்துள்ளது.

டுட்டீ சந்த் சமீபத்தில் நபோளியில் நடந்த உலக யுனிவர்சிட்டி போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News