செய்திகள்
ராபின் சிங்

இந்த விஷயத்திற்காக ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும்: ராபின் சிங்

Published On 2019-07-28 10:12 GMT   |   Update On 2019-07-28 10:12 GMT
இந்த விஷயத்திற்காக ரவி சாஸ்திரியை மாற்றினால் இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும் என்று ராபின் சிங் தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி 2015 மற்றும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களை சந்தித்தது. இரண்டிலும் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியது.

இதனால் ரவி சாஸ்திரியை மாற்றினால் இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும் என்று ராபின் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், பீல்டிங் பயிற்சியாளருமான ராபின் சிங் இதுகுறித்து கூறுகையில் ‘‘தற்போதைய பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டு முறை அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் டி20 உலகக்கோப்பையிலும் தோல்வியை சந்தித்தது.



தற்போது 2023 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்யும் நேரம். அவரை மாற்றினால் அது அணிக்கு சிறந்ததாக இருக்கும். நான் பயிற்சியாளராக இருந்திருந்தால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் 4-வது இடத்திற்கு ரகானே மற்றும் அம்பதி ராயுடுவை தேர்வு செய்திருப்பேன்’’ என்றார்.
Tags:    

Similar News