செய்திகள்
முனாப் பட்டேல்

அது அவ்வளவு ஈசியானது அல்ல.. -முனாப் பட்டேல் சொல்வதென்ன?

Published On 2019-07-24 04:25 GMT   |   Update On 2019-07-24 04:25 GMT
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் குறித்து கருத்து கூறியுள்ளார். அது என்ன என்பதை பார்ப்போம்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததில் இருந்தே, அனுபவ வீரரான டோனி கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக, அவரது ஓய்வு குறித்து பலரும் பேசி வருகின்றனர்.

ஆனால், டோனியிடம் இருந்து எவ்வித பதிலும் இன்னும் வெளியாகவில்லை. கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முனாப் பட்டேல் டோனிக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:



டோனி, தனக்கென்று ஒரு தனி ப்ளானை வைத்திருப்பார். அது பற்றி பிசிசிஐயிடமும் நிச்சயம் தெரிவித்திருப்பார். அவர் என்ன செய்ய வேண்டும்? என்பதை யாடும் ஆலோசனையாக கூற வேண்டிய அவசியம் இல்லை.

1975ம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் செய்த சாதனைகளை டோனி, 2007-2015ம் ஆண்டுகளிலேயே செய்து முடித்துவிட்டார். இந்தியாவிற்கென அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்துவிட்டார்.

எனவே, டோனி மாதிரியான ஒரு சிறந்த வீரரை இந்திய அணியில் இருந்து அவ்வளவு எளிதாக தவிர்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News