செய்திகள்
தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர் தவான், விஜய் சங்கர்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது காயம் அடைந்த தவான், விஜய் சங்கர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அறிக்கையை சமர்பித்துள்ளனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா அரையிறுதியோடு வெளியேறியது. இந்திய அணியில் தவான், விஜய் சங்கர் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
தொடர் நடந்து கொண்டிருக்கும்போது இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். உலகக்கோப்பை தொடருக்குப்பின் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடுகிறது. இதற்கான அணி நாளை அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் தங்களுக்கு ஏற்பட்ட காயம், அதற்கான சிகிச்சை முறை குறித்த அறிக்கையை இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சமர்பித்துள்ளனர். இருவருடைய அறிக்கை மீதும் திருப்தி ஏற்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்கள் தேர்வில் பரிசீலிக்கப் படுவார்கள்.
தொடர் நடந்து கொண்டிருக்கும்போது இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். உலகக்கோப்பை தொடருக்குப்பின் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடுகிறது. இதற்கான அணி நாளை அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் தங்களுக்கு ஏற்பட்ட காயம், அதற்கான சிகிச்சை முறை குறித்த அறிக்கையை இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சமர்பித்துள்ளனர். இருவருடைய அறிக்கை மீதும் திருப்தி ஏற்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்கள் தேர்வில் பரிசீலிக்கப் படுவார்கள்.