செய்திகள்
இரட்டை சதம் அடித்த மாணவர் டி.சைலேஷ்

ஜூனியர் கிரிக்கெட் - சென்னை மாணவர் இரட்டை சதம்

Published On 2019-07-17 07:30 GMT   |   Update On 2019-07-17 07:30 GMT
பள்ளி அணிகள் இடையேயான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் சென்னை மாணவர் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்துள்ளார்.

பள்ளி அணிகள் இடையேயான ஜூனியர் கிரிக்கெட் போட்டி (12 வயதுக்குட்பட்டோர்) நந்தனம் மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று உள்ளன.

இதன் ‘லீக்’ ஆட்டம் ஒன்றில் செயின்ட் பீட்ஸ்- செயின்ட் பேட்ரிக்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய செயின்ட் பீட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்தது.

அந்த அணி வீரர் டி.சைலேஷ் தேவ் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 93 பந்துகளில் 204 ரன் குவித்தார். இதில் 43 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

பின்னர் ஆடிய செயின்ட் பேட்ரிக்ஸ் அணி 26 ஓவர்களில் 111 ரன்னில் சுருண்டது. இதனால் செயின்ட் பீட்ஸ் பள்ளி 201 ரன்னில் அபார வெற்றி பெற்றது.
Tags:    

Similar News