செய்திகள்
ஜோகோவிச்

விம்பிள்டன் இறுதிப் போட்டி: 3-வது செட்டை கைப்பற்றினார் ஜோகோவிச்

Published On 2019-07-14 15:35 GMT   |   Update On 2019-07-14 15:35 GMT
டை பிரேக்கர் வரை சென்ற 3-வது செட்டை கைப்பற்றி ஜோகோவிச் 2-1 என முன்னிலையில் உள்ளார்.
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் - நம்பர் 2 வீரரான பெடரர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

3-வது செட்டில் இருவரும் சமமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஜர் பெடரர் கேம்-ஐ தொடங்கினார். தனது சர்வீசில் தொடங்கிய முதல் கேம்-ஐ 40-15 எனக் கைப்பற்றினார். ஜோகோவிச் 2-வது கேம்-ஐ 40-30 எனக் கைப்பற்றினார். 3-வது கேமில் ஒரு புள்ளிகளைகூட இழக்காமல் பெடரர் 40-0 எனக்கைப்பற்றினார்.

4-வது கேம்-ஐ ஜோகோவிச் 40-15 எனக் கைப்பற்றினார். இருவரும் மாறிமாறி கேம்-ஐ கைப்பற்றி வந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு  ஏற்பட்டது. ஐந்தாவது கேம்-ஐ பெடரர் 40-15 எனவும், 6-வது கேம்-ஐ ஜோகோவிச் 40-15 எனவும், 7-வது கேம்-ஐ பெடரர் 40-0 எனவும், 8-வது கேம்-ஐ ஜோகோவிச் 40-15 எனவும் கைப்பற்றினர்.

12 கேம் முடிவுகளில் இருவரும் 6-6 என சமநிலைப் பெற்றனர். இதனால் ‘டை பிரேக்கர்’ கடைபிடிக்கப்பட்டது. டை பிரேக்கர் முடிவில் ஜோகோவிச் 7(7) - 6(4) என 3-வது செட்டை கைப்பற்றினார். இதனால் ஜோகோவிச் 2-1 என முன்னிலையில் உள்ளார்.
Tags:    

Similar News