செய்திகள்
ரவி சாஸ்திரி விராட் கோலி

அரையிறுதியில் தோல்வி: விராட் கோலி, ரவி சாஸ்திரியிடம் கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகும் சிஓஏ

Published On 2019-07-12 10:35 GMT   |   Update On 2019-07-12 10:35 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் தோல்வியடைந்தது குறித்து விராட் கோலி, ரவி சாஸ்திரியிடம் கேள்வி கேட்க உள்ளதாக நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. 240 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் 221 ரன்களில் சுருண்டது.

தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, அரையிறுதியில் தோல்வியடைந்ததால் விமர்சனம் எழும்பிய வண்ணம் உள்ளது. மேலும், டோனியை 7-வது இடத்தில் களம் இறக்கியது குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது. வருங்காலத்தில் சிறந்த அணியை எப்படி கட்டமைப்பது என்பது குறித்து கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் சிஒஏ ஆலோசனை நடத்தும் என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வினோத் ராய் கூறுகையில் ‘‘பயிற்சியாளர் மற்றும் கேப்டன் விராட் கோலியுடன் அவர்கள் விடுமுறை முடிந்தவுடன் நாங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவோம். அதேபோல் வருங்காலத்தில் எப்படி செயல்படுவது என்னது குறித்து தேர்வுக்குழு தலைவருடனும் ஆலோசனை நடத்துவோம்’’ என்றார்.



விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியிடம் அரையிறுதியில் டோனியை 7-வது இடத்தில் களம் இறக்க காரணம் என்ன?, ஒன்றரை ஆண்டுகளாக நான்காவது இடத்திற்கு அம்பதி ராயுடுவை தயார் செய்துவிட்டு, உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்காதது ஏன்? போன்ற கேள்விகள் கேட்கப்படும் எனத் தெரிகிறது.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக்குழுவில் வினோத் ராய் (தலைவர்), டயானா எடுல்ஜி, ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் ரவி தோட்ஜே ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News