செய்திகள்
ராகுல் டிராவிட்

தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக டிராவிட் நியமனம்

Published On 2019-06-29 22:40 GMT   |   Update On 2019-06-29 22:40 GMT
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

டெல்லியில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டிராவிட் நாளை தனது புதிய பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
Tags:    

Similar News