செய்திகள்

கிரிக்கெட் நமக்கு சிறந்த குருவைப் போல.. -நெகிழ்ந்த விராட் கோலி

Published On 2019-06-22 04:20 GMT   |   Update On 2019-06-22 04:20 GMT
இங்கிலாந்தின் பவுல் மைதானத்தில் பள்ளி சிறுவர்களுக்கு கிரிக்கெட் நடத்தப்பட்டது. அப்போது கிரிக்கெட் ஒரு குருவைப் போல உள்ளது என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் புகழ்மிக்க பவுல் மைதானத்தில் சிறுவர்களுக்கான கிரிக்கெட், ஐசிசி சார்பில் நடத்தப்பட்டது. இதில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதில் விராட் கோலி, சிறுவர்கள் ஆட்டம் முடிந்த பின்னர் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் கிரிக்கெட் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



கிரிக்கெட் என்பது சிறுவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை நம்புகிறேன். கிரிக்கெட் உண்மையில் மனித நேயத்தை வளர்க்கிறது. மேலும் வாழ்வின் முக்கிய கட்டங்களை புரிய வைக்கிறது.

கிரிக்கெட் விளையாடினால் அனைவரும் வீழ்ச்சியை புரிந்துகொள்ள முடியும். கடினமான காலங்களில் இருந்து எப்படி மீளமுடியும் என்பதை கிரிக்கெட் நமக்கு தெளிவாக உணர்த்தும்.

இதனால்தான் கிரிக்கெட், ஒரு சிறந்த குருவைப் போல வாழ்க்கையை நமக்கு  எடுத்து உரைக்கிறது என்பதை உணர்ந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.





Tags:    

Similar News