செய்திகள்

நன்றாக விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம்- விராட் கோலி நம்பிக்கை

Published On 2019-06-15 13:07 GMT   |   Update On 2019-06-15 13:07 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில், நன்றாக விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டன்: 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் தற்போது  லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளை மேன்செஸ்டரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. 

இதுவரை விளையாடிய 3 லீக் ஆட்டங்களில் இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதேபோல் இதுவரை 4 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 1 வெற்றி, 2 தோல்வி அடைந்து, புள்ளிபட்டியலில் பின்தங்கியுள்ளது.



இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: 

பாகிஸ்தானுடனான போட்டி மட்டுமல்ல, எங்களை பொறுத்தவரை அனைத்து போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். நன்றாக விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம்.  நன்றாக கிரிக்கெட் விளையாடுவதால் தான், நாங்கள் உலகின் தலைசிறந்த அணியாக  திகழ்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News