இந்தியா

வர்க்கலை கோவில் விழாவில் மிரண்டு ஓடிய யானை

Published On 2023-03-10 11:37 IST   |   Update On 2023-03-10 11:37:00 IST
  • கேரள மாநிலம் வர்க்கலை பகுதியில் உள்ள கோவில் விழாவுக்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்டது.
  • ஒரு மணி நேரத்திற்கு பிறகு யானையை பாகன்கள் கட்டுப்படுத்தினர்.

கேரள மாநிலம் வர்க்கலை பகுதியில் உள்ள கோவில் விழாவுக்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்டது.கோவிலில் எழுப்பப்பட்ட ஓசை காரணமாக திடீரென யானை மிரண்டது. தன் மீது இருந்த பாகனை கீழே தள்ளிவிட்ட யானை கோவிலில் இருந்து மிரண்டு வெளியே ஓடியது.

இதை கண்டு கோவிலில் இருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு யானையை பாகன்கள் கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News