இந்தியா

மகாத்மா காந்தி அநீதிக்கு எதிராக நாட்டை ஒன்றிணைத்தது போல் இந்தியாவை ஒன்றிணைப்போம்: ராகுல் காந்தி

Published On 2022-10-02 06:39 GMT   |   Update On 2022-10-02 06:45 GMT
  • உண்மை மற்றும் அகிம்சையின் பாதையில் நடக்க மகாத்மா காந்தி எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
  • அன்பு, கருணை, நல்லிணக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் அர்த்தத்தை அவர் விளக்கினார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், தேசத் தந்தை அநீதிக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைத்ததைப் போலவே இந்தியாவை ஒருங்கிணைக்க நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று கூறினார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உண்மை மற்றும் அகிம்சையின் பாதையில் நடக்க மகாத்மா காந்தி எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்பு, கருணை, நல்லிணக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் அர்த்தத்தை அவர் விளக்கினார்.

காந்தி ஜெயந்தியான இன்று, அவர் அநீதிக்கு எதிராக நாட்டை ஒன்றிணைத்தது போல், நமது இந்தியாவையும் ஒன்றிணைப்போம் என்று நாங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News