இந்தியா

மகாராஷ்டிரா ஆளுநருடன் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு

Published On 2022-06-30 10:46 GMT   |   Update On 2022-06-30 11:52 GMT
  • பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது.
  • ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பட்னாவிஸ் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி தந்த நிலையில் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பட்னாவிஸ் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News