இந்தியா

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2022-08-09 06:11 GMT   |   Update On 2022-08-09 06:11 GMT
  • போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்தது.
  • யோகி ஆதித்யநாத் மீது இன்னும் 3 நாட்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்.

லக்னோ:

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்தது. அதில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது இன்னும் 3 நாட்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த மிரட்டல் கடந்த 2-ந் தேதி விடுக்கப்பட்டது. தற்போதுதான் அது பற்றி தகவல் வெளியாகி உள்ளது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து வாட்ஸ்-அப் உதவி எண் சேவைக்கான அதிகாரி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Similar News