இந்தியா

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய ஆந்திர பிரமுகர் கைது

Published On 2022-11-28 07:30 GMT   |   Update On 2022-11-28 07:30 GMT
  • ஆந்திராவை சேர்ந்த சீனிவாசராவ் என்ற பிரமுகரை போலீசார் திடீரென கைது செய்தனர்.
  • சிபாரிசு செய்தார்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி:

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த ஆந்திராவை சேர்ந்த சீனிவாசராவ் என்ற பிரமுகரை போலீசார் திடீரென கைது செய்தனர். அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. அவர் அங்கு கொடுத்துள்ள பெயர் . முகவரி உண்மையானது தானா அல்லது போலியானதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் தமிழ் நாடு இல்லத்தில் தங்க யார்? சிபாரிசு செய்தார்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News