இந்தியா
உ.பியில் லாரி மீது டிராக்டர் மோதி விபத்து- 4 பேர் பலி
- காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் உள்ள தல்பேஹாட் காவல் நிலையப் பகுதியில் இன்று காலை டிராக்டரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.