இந்தியா

இந்தியாவில் புதிதாக 2,468 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2022-10-05 06:10 GMT   |   Update On 2022-10-05 06:10 GMT
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,731 பேர் மீண்டுள்ளனர்.
  • இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 39 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 1,968 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,468 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 1 ஆயிரத்து 934 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,731 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 39 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 1,280 குறைந்துள்ளது. அதாவது தற்போது 33,318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 9 மரணங்கள் உள்பட மேலும் 17 பேர் இறந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 5,28,733 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News