இந்தியா

தினசரி பாதிப்பு அதிகரிப்பு- இந்தியாவில் ஒரே நாளில் 18,819 பேருக்கு கொரோனா

Published On 2022-06-30 04:12 GMT   |   Update On 2022-06-30 07:18 GMT
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 13,827 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரத்து 493 ஆக உயர்ந்துள்ளது.
  • தற்போது 1,04,555 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 4,953 அதிகம் ஆகும்.

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

கடந்த 27-ந்தேதி பாதிப்பு 17,073 ஆக இருந்தது. மறுநாள் 11,793 ஆக குறைந்த நிலையில் நேற்று 14,506 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.

கேரளாவில் புதிதாக 4,459 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் 3,957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் 1,945 பேர், தமிழ்நாட்டில் 1,827, மேற்கு வங்கத்தில் 1,424, டெல்லியில் 1,109 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 52 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பால் மகாராஷ்டிராவில் 7, உத்தரபிரதேசத்தில் 4, பஞ்சாபில் 3, கர்நாடகா, மேற்கு வங்கம், அரியானாவில் தலா 2, டெல்லி, சிக்கிமில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

இதுதவிர கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் 17 மரணங்கள் என மேலும் 39 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,25,116 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து 13,827 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரத்து 493 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 1,04,555 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 4,953 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 14,17,217 டோஸ்களும், இதுவரை 197 கோடியே 61 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 86.23 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4,52,430 மாதிரிகள் அடங்கும்.

Tags:    

Similar News