இந்தியா

தாக்குதல் நடந்த அதிருப்தி எம்எல்ஏ அலுவலகம்

அதிருப்தி எம்.எல்.ஏ. அலுவலகத்தை சூறையாடிய சிவசேனா தொண்டர்கள் - புனேவில் பரபரப்பு

Published On 2022-06-25 08:46 GMT   |   Update On 2022-06-25 10:31 GMT
  • மகாராஷ்டிராவில் 3 கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
  • அதிருப்தி எம்.எல்.ஏ.வின் அலுவலகம் சிவசேனா தொண்டர்களால் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல் மந்திரியாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 40க்கு மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்களுடன் அசாமின் கவுகாத்தியில் ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்களைக் கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, புனேவில் உள்ள பாலாஜி நகரில் பராண்டா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. தனாஜி சாவந்த் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் இன்று அடித்து நொறுக்கினர்.

இதேபோல், பல்வேறு பகுதிகளில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் தனாஜி சாவந்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News