இந்தியா
ராகுல்காந்தி இன்று வயநாடு வருகை- கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
- ராகுல் காந்தி இன்று கேரளா வருகிறார்.
- வயநாடு செல்லும் ராகுல் காந்தி தாக்குதலுக்கு உள்ளான எம்.பி. அலுவலகத்தை பார்வையிடுகிறார்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தியின் அலுவலகம் கடந்த வாரம் தாக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பினர் ஈடுபட்டதாக காங்கிரசார் குற்றம்சாட்டினர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரசார் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று கேரளா வருகிறார். அங்கு வயநாடு செல்லும் அவர் அங்கு தாக்குதலுக்கு உள்ளான அலுவலகத்தை பார்வையிடுகிறார்.
பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதோடு தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.