மின்சாரம் வழங்குவது அரசின் பொறுப்பு... ஆனால் அதை சேமிப்பது மக்களின் கடமை: பிரதமர் மோடி பேச்சு
- ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும் என பிரதமர் பேச்சு
- சிறு துளி நீருக்கு அதிக பயிர் என்ற நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்தவேண்டும்
புதுடெல்லி:
சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களாக இருந்தாலும் சரி, காவல்துறையினராக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும்.
24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முயற்சிப்பது அரசின் கடமை. ஆனால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு மின்சாரத்தை சேமிப்பது மக்களின் கடமை ஆகும்.
ஒவ்வொரு வயலுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்வது அரசின் கடமை. எனினும், சிறு துளி நீருக்கு அதிக பயிர் என்ற நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்தவேண்டும். ரசாயனமற்ற விவசாயம், இயற்கை விவசாயம் செய்வது நமது கடமை.
இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்கான கடமைகளை நிறைவேற்றினால், எதிர்பார்த்த முடிவுகளை முன்கூட்டியே அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.