இந்தியா

ராஜேஷ் பூஷன்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் - மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை கடிதம்

Published On 2022-06-28 11:05 GMT   |   Update On 2022-06-28 11:05 GMT
  • இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்துள்ளது.
  • நாடு முழுவதும் 197 கோடியே 31 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News