இந்தியா

புதிய இந்தியாவில் நண்பர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்- அக்னிபாத் திட்டத்தை மீண்டும் விமர்சித்த ராகுல்

Published On 2022-06-24 10:21 GMT   |   Update On 2022-06-24 10:21 GMT
  • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
  • கேப்டன் பானா சிங்கின் ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் பகிர்ந்துள்ளார்.

புதுடெல்லி:

ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

அவ்வகையில், அக்னிபாத் திட்டத்தை விமர்சித்து பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் பானா சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவை ராகுல் காந்தி இன்று பகிர்ந்துள்ளார்.

ஒரு பக்கம் நாட்டின் பரம்வீரும், மறுபக்கம் பிரதமரின் ஆணவமும் சர்வாதிகாரமும் உள்ளது. புதிய இந்தியாவில் நண்பர்கள் சொல்வது மட்டும் கேட்கப்படுமே தவிர, நாட்டின் ஹீரோக்களின் கருத்துக்கள் அல்ல என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

கேப்டன் பானா சிங்கின் ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News