இந்தியா

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது

Published On 2022-06-28 09:28 GMT   |   Update On 2022-06-28 10:19 GMT
  • ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காக மாநில அரசு செஸ் வரி விதித்து வருகிறது.
  • ஆன்லைன் சூதாட்டம், தங்கத்தின் மீதான இ-வே பில்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகரில் இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் 2 நாட்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காக மாநில அரசு செஸ் வரி விதித்து வருகிறது. இந்த வரிவிதிப்பு வருகிற 30-ந் தேதி முடிவடைகிறது. எனவே இதை இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றன. இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் ஜி.எஸ்.டி. வரி கட்டமைப்பை திருத்துவது, வரி விலக்கு பட்டியலில் இருந்து சில பொருட்களை அகற்றுவது, வரி ஏய்ப்பை தடுக்க ஜி.எஸ்.டி. அமைப்பில் சீர்திருத்தம் செய்வது, ஆன்லைன் சூதாட்டம், தங்கத்தின் மீதான இ-வே பில்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

Tags:    

Similar News