இந்தியா

ராகுல் காந்தி எம்.பி.யின் வயநாடு அலுவலகம் மீது தாக்குதல்

Published On 2022-06-24 13:27 GMT   |   Update On 2022-06-24 13:27 GMT
  • கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்திருக்கும்போது, வெளியே இருந்து வந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.
  • இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) கொடிகளை ஏந்தியபடி குண்டர்கள் வந்து தாக்கியதாக இளைஞர் காங்கிரஸ் தகவல்

வயநாடு:

கேரளாவின் வயநாடுவில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனை அக்கட்சி உறுதி செய்து உள்ளது.

இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து உள்ளது. அதில், கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்திருக்கும்போது, வெளியே இருந்து வந்த சிலர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

இதுபற்றி இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) கொடிகளை ஏந்தியபடி குண்டர்கள் வந்தனர். அவர்கள் ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தின் சுவர் மீது ஏறி, குதித்து உள்ளே வந்தனர். கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர்' என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News