இந்தியா
சாலை விபத்து

உ.பியில் லாரி மீது ஆட்டோ மோதி விபத்து: 3 பேர் பலி- 5 பேர் படுகாயம்

Published On 2022-05-11 14:00 GMT   |   Update On 2022-05-11 14:00 GMT
விபத்து நடந்தவுடன் லாரியின் ஓட்டுனரும், உதவியாளரும் சம்பவ இடத்திலிருந்த தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தின் ஹர்பால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கத்ரா- பில்ஹூர் நெடுஞ்சாலையில் ஆட்டோ லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மூர்த்தி தேவி (30), அவரது எட்டு வயது மகன் சச்சின் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்வர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்தவுடன் லாரியின் ஓட்டுனரும், உதவியாளரும் சம்பவ இடத்திலிருந்த தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. பெருமூளை நோயால் பாதிக்கப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்- வெளியான பரபரப்பு தகவல்
Tags:    

Similar News