இந்தியா
தலைநகர் டெல்லி ரோகினி பகுதியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் டெல்லி ரோகினி பகுதியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் இன்று காலை சிலர் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் சண்டையிட்டு கொண்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்து நாகலாந்து போலீஸ் பாதுகாப்பு வீரர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றார்.
அப்போது அவரது துப்பாக்கியில் இருந்து குண்டு தரையில் பாய்ந்தது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்செயலாக துப்பாக்கியால் சுடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.