இந்தியா
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- பிரதமர் மோடி

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2022-04-17 05:39 GMT   |   Update On 2022-04-17 05:39 GMT
ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூகத்தில் மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவம் வளர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் இன்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், மன்னிப்பு, தியாகம் மற்றும் அன்பின் பாதையைப் பின்பற்ற ஈஸ்டர் மக்களை ஊக்குவிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பம், மன்னிப்பு, தியாகம் மற்றும் அன்பின் பாதையைப் பின்பற்ற ஈஸ்டர் நம்மைத் தூண்டுகிறது. கிறிஸ்துவின் போதனைகள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ஊக்குவிக்கப்பட்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூகத்தில் மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவம் வளர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் மற்றும் சமூக நீதி மற்றும இரக்கத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவு கூர்கிறோம். மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவத்தின் ஆவி நம் சமூகத்தில் மேலும் வளரட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு
Tags:    

Similar News