இந்தியா
பாராளுமன்றம்

13 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

Published On 2022-03-07 21:33 GMT   |   Update On 2022-03-07 21:33 GMT
பஞ்சாப், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் வரும் 31-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா உள்பட 13 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்நிலையில், அந்த காலியிடங்களை நிரப்ப இம்மாதம் 31-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

பஞ்சாப்பில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, இமாசல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்தில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 14-ம் தேதி தொடங்குகிறது. மனுதாக்கலுக்கு 21-ம் தேதி இறுதிநாள் ஆகும்.

31-ம் தேதி தேர்தல் முடிந்தவுடன் அதே நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News