இந்தியா
திருப்பதி

பிப்ரவரி மாதம் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.79.34 கோடி

Published On 2022-03-05 05:11 GMT   |   Update On 2022-03-05 05:11 GMT
பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் ேகாவில் உண்டியல் வருமானமாக ரூ.79.34 கோடி கிடைத்தது. 10 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவலுக்கு முன்பு தினமும் லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசனத்தைத் தொடங்கி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 724 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.79 கோடியே 34 லட்சம் கிடைத்தது. 5 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 13 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு 1 லட்சத்து 64 ஆயிரம் அறைகள் ஒதுக்கீடு செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது. 27.76 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு 64 லட்சத்து 90 ஆயிரம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 378 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவை செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News