இந்தியா
கொரோனா தடுப்பூசி

2 கோடி சிறார்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மன்சுக் மாண்டவியா பெருமிதம்

Published On 2022-02-18 21:36 GMT   |   Update On 2022-02-18 21:36 GMT
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 174.50 கோடியை தாண்டியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
 
முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தும் பணி நடந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
 
இந்நிலையில் நாடு முழுவதிலும் இதுவரை 2 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டு டோசும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தகுதிவாய்ந்த அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
Tags:    

Similar News