இந்தியா
ரவிசங்கர் பிரசாத், பிரதமர் மோடி

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பத்ம விருதுகள் - மோடிக்கு ரவிசங்கர் பிரசாத் பாராட்டு

Published On 2022-01-25 20:17 GMT   |   Update On 2022-01-25 20:18 GMT
குலாம் நபி ஆசாத் மற்றும் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்குவது பொது வாழ்வில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்கான அங்கீகாரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவரும் அக்கட்சியின் எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் தமது ட்விட்டரில் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் சிபிஎம் தலைவரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்குவது பொது வாழ்வில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்கான அங்கீகாரமாகும். 

இது பிரதமர் நரேந்திர மோடியின் பெருந்தன்மையையும், ஜனநாயக மதிபீடு மீதான அவரது அர்ப்பணிப்பையும் காட்டுகிறது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News