இந்தியா
பிரகாஷ் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரிபிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா

Published On 2022-01-20 01:42 GMT   |   Update On 2022-01-20 01:42 GMT
பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கிய தலைவருமான பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
லூதியானா :

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கிய தலைவருமான பிரகாஷ் சிங் பாதலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் தயானந்த் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

பிரகாஷ் சிங்கிற்கு 94 வயதாகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் லாம்பி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சி பிரமுகர்களை சந்தித்து வந்தார். செவ்வாய்க்கிழமை முதுகுவலி காரணமாக தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்திருந்தார். உடற்பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா உறுதியானது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News