இந்தியா
டெல்லியில் கனமழை

டெல்லியில் கனமழை - சுரங்க பாதைகளில் தண்ணீர் தேக்கம்

Published On 2022-01-08 03:17 GMT   |   Update On 2022-01-08 03:17 GMT
தலைநகரில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று  அதிகாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக கிழக்கு டெல்லியில் உள்ள மண்டவாலி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது.

சுரங்கப் பாதையை கடக்க முயன்ற வாகனங்கள் தண்ணீரில் சிக்கின.  அதிகாலையில் வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர். இந்நிலையில் 
 அடுத்த 2 மணி நேரத்தில் டெல்லி, சப்ராவுலா, நொய்டா, தாத்ரி, கிரேட்டர் நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத், மானேசர், பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஜனவரி 9 ஆம் தேதி வரை டெல்லியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News