இந்தியா
திருப்பதி

ஆன்லைனில் டிக்கெட் வழங்குவதில் மோசடி நடக்கவில்லை: திருப்பதி தேவஸ்தானம்

Published On 2022-01-06 06:53 GMT   |   Update On 2022-01-06 06:53 GMT
ஆன்லைனில் டிக்கெட் வழங்குவதில் மோசடிகள் நடக்க வாய்ப்பில்லை. தவறான செய்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
திருமலை :

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பக்தர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆப் லைன் மூலம் வழங்கப்படுகிற டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் பிரிவு கண்காணித்து வருகிறது. ஆன்லைனில் டிக்கெட் வழங்குவதில் மோசடிகள் நடக்க வாய்ப்பில்லை.

டிக்கெட் வழங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். கிளவுட் தொழில்நுட்பம் மூலம் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை வெளியிடுவதால், பக்தர்கள் இவற்றை வேகமாக பெற்று வருகின்றனர். தவறான செய்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News