இந்தியா
தனது செல்ல குதிரை குட்டியுடன் எம்.எஸ்.தோனி

சிங்கத்துடன் குதிரை - தோனி பகிர்ந்த புகைப்படம்

Published On 2022-01-04 19:57 GMT   |   Update On 2022-01-04 19:57 GMT
தனது செல்லப் பிராணிகளுடன் தோனி நேரத்தை செலவிடுவது குறித்த பதிவுகளை சமூக வளைதளங்களில் தோனியின் மனைவி சாக்சி தோனி பதிவிட்டு வருகிறார்.
ராஞ்சி :

இந்திய கிரிக்கெட் அணியின் பணக்கார வீரர்கள் பட்டியலில் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனிக்கும் இடம் உண்டு. விலங்குகள் வளர்ப்பு மீது அதிக ஈடுபாடு கொண்ட தோனி  ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில், வெளிநாட்டு வகையை சேர்ந்த 4 செல்ல நாய்களை வளர்த்து வருகிறார். மேலும் ஒரு கிளி மற்றும் குதிரை குட்டி ஒன்றும் அவரது வீட்டில் இடம் பிடித்துள்ளன.

தனது செல்லப் பிராணிகளுடன் தோனி நேரம் செலவிடுவது போன்ற பதிவுகளை அவரது மனைவி சாக்சி தோனி, ரசிகர்கள் பார்வைக்கு வெளியிட்டு வருகிறார்.  இந்நிலையில் தனது அறையில் உள்ள சோபாவில் அமர்ந்து தனது செல்ல குதிரைக்குட்டியான சேடக்குடன் தோனி நொருக்கு தீனி சாப்பிடுவது போன்ற புகைப்படம் வெளியானது. சில மணி நேரங்களில் அது சமூக வளைதளங்களில் வைரலானது.  அதை பார்த்த தோனியின் ரசிகர்கள் சிலர் சிங்கம் குதிரையுடன் அமர்ந்திருப்பதாகக்  கருத்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News