இந்தியா
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
ஆந்திராவில் சிறுமிகளான அக்காள், தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பெத்த பாடு பகுதியை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 11 மற்றும் 9 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.
கணவர் இறந்து விட்டதால் தனது தாய் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் தன்னுடைய 2 மகள்களையும் தாய் வீட்டில் விட்டுவிட்டு ஹைதராபாத்தில் வேலைக்கு சென்றார்.
அதே பகுதியை சேர்ந்தவர் இளம்பெண்ணின் உறவினர் பவன்குமார் (வயது 30). சிறுமிகள் 2 பேரும் பவன்குமார் உறவினர் என்பதால் அவருடன் நட்பாக பழகி வந்தனர்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பவன்குமார் சிறுமிகளிடம் நைசாக பேசி அவர்களை கடந்த 5 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிகள் இருவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியின் பாட்டி அவர்களை சிகிச்சைக்காக டாக்டரிடம் அழைத்து சென்றார். சிறுமிகளை பரிசோதித்த டாக்டர் 2 பேரும் கர்ப்பமாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிறுமியின் பாட்டியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மூதாட்டி பெத்தபாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பவன் குமாரை போக்சோவில் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பெத்த பாடு பகுதியை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 11 மற்றும் 9 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.
கணவர் இறந்து விட்டதால் தனது தாய் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் தன்னுடைய 2 மகள்களையும் தாய் வீட்டில் விட்டுவிட்டு ஹைதராபாத்தில் வேலைக்கு சென்றார்.
அதே பகுதியை சேர்ந்தவர் இளம்பெண்ணின் உறவினர் பவன்குமார் (வயது 30). சிறுமிகள் 2 பேரும் பவன்குமார் உறவினர் என்பதால் அவருடன் நட்பாக பழகி வந்தனர்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பவன்குமார் சிறுமிகளிடம் நைசாக பேசி அவர்களை கடந்த 5 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிகள் இருவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியின் பாட்டி அவர்களை சிகிச்சைக்காக டாக்டரிடம் அழைத்து சென்றார். சிறுமிகளை பரிசோதித்த டாக்டர் 2 பேரும் கர்ப்பமாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிறுமியின் பாட்டியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மூதாட்டி பெத்தபாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பவன் குமாரை போக்சோவில் கைது செய்தனர்.