இந்தியா
அனைத்து மாநில நிதிமந்திரிகளுடன் நிர்மலா சீதாராமன் இன்று சந்திப்பு
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மாநிலங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் கவனிக்கப்படும் என தெரிகிறது.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகளுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் நடத்துகிறார்.
இதில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்த சவாலை எதிர்கொள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கூடுதல் நிதி கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...சரத்பவார் மகள் மற்றும் மருமகனுக்கு கொரோனா