இந்தியா
ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இத்தாலி பயணம்

Published On 2021-12-29 22:00 GMT   |   Update On 2021-12-29 22:00 GMT
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் ராகுல் காந்தி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல்காந்தி நேற்று இத்தாலி நாட்டுக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். 

ஒமைக்ரான் பரவலால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், கத்தார் தலைநகர் தோஹா வழியாக அவர் இத்தாலி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அவர் இன்னும் சில நாட்களுக்கு இந்தியாவில் இருக்கமாட்டார். ஜனவரி 15-ம் தேதி வரை அவர் வெளிநாட்டில் இருப்பார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் இத்தாலி பயணம் தனிப்பட்டது. அவரது பயணம் பற்றி பா.ஜ.க.வினர் வீண்வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.

Tags:    

Similar News