இந்தியா
ராகுல் காந்தி இல்லத்தின் முன் பஞ்சாப் ஆசிரியர்கள் போராட்டம்
ராகுல் காந்தியை சந்தித்து தங்கள் பிரச்சனையை சொல்லி தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டதைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வித்துறையின் தவறு காரணமாக சம்பளம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநில அரசிடம் முறையிட்டும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இதனால், டெல்லியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வீட்டின் முன்பு ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில ஆசிரியைகள் தங்கள் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ராகுல் காந்தியை சந்தித்து தங்கள் பிரச்சனையை சொல்லி தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.