இந்தியா
அசாதுதீன் ஒவைசி

உங்களை காப்பாற்ற யார் வருவார்கள்? - அசாதுதீன் ஒவைசி சர்ச்சை பேச்சு

Published On 2021-12-24 20:23 GMT   |   Update On 2021-12-24 20:23 GMT
காலம் மாறும்... அப்போது உங்களை யார் காப்பாற்ற வருவார்கள் என்று ஒவைசி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எ.ஐ.எம்.ஐ.எம். உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கி உள்ளன.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் எ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் மாநில போலீசாரை எச்சரிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அவர் பேசியதாவது:

நான் உத்தர பிரதேச போலீசாருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். யோகி ஆதித்யநாத் நிரந்தரமாக முதல் மந்திரியாக இருக்கமாட்டார். மோடி நிரந்தரமாக பிரதமராக இருக்கமாட்டார். இஸ்லாமியர்களாகிய நாங்கள் காலத்தால் அமைதியாக இருக்கிறோம். 

ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இந்த அநீதியை நாங்கள் மறக்கமாட்டோம். உங்களின் அநீதியை நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். கடவுள் அவரின் சக்தியால் உங்களை அழிப்பார். காலம் மாறும். அப்போது உங்களை காப்பாற்ற யார் வருவார்கள். யோகி ஆதித்யநாத் அவரது இடத்திற்கும், மோடி மலைக்குச் சென்றதும் உங்களை காப்பாற்ற யார் வருவார்கள். என தெரிவித்தார்.

அசாதுதீன் ஒவைசியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News