இந்தியா
கர்நாடகாவில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
கர்நாடகாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு:
இந்தியாவில் பல மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 236 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பதிவாகியிருந்தது. இன்று காலை தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அண்டைமாநிலமான கர்நாடகாவில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கர்நாடகாவில் மொத்த பாதிப்பு 31ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் கேரளாவில் இன்று 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.