மும்பையில் சுமார் 20 மாதங்களுக்கு பிறகு இன்று 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நகர் பகுதிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், ஊரகப்பகுதிகளில் 5 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி முதல் நகர்பகுதிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலும், ஊரகப்பகுதிகளில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த போதும், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மும்பை உள்ளிட்ட சில பகுதிகளில் தொடக்க பள்ளிகள் திறக்கப்படவில்லை.
மும்பையில் சுமார் 20 மாதங்களுக்கு பிறகு இன்று தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.