இந்தியா
பிபின் ராவத்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

Published On 2021-12-09 23:24 GMT   |   Update On 2021-12-09 23:24 GMT
பாலம் விமானப்படைத் தளத்தை வந்தடைந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு நேற்று இரவு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி:

தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தவண்ணம் உள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குன்னூரில் ராணுவ நடைமுறைகள் முடிந்தபின்னர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் நேற்று டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்தில் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. அதன்பின், ராவத்தின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு டெல்லி கன்டோன்மென்டில் உள்ள மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News