இந்தியா
திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு தலாய் லாமா இரங்கல்

Published On 2021-12-09 07:18 GMT   |   Update On 2021-12-09 07:18 GMT
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தர்மசாலா:

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இவர்களது மறைவுக்கு உலகம் முழுவதிலிருந்தும் இரங்கல் செய்தி வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா பிபின் ராவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் சக அதிகாரிகளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் இறந்த அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசத்தின் சேவையில் தளபதி ராவத்தின் நீண்டகால பங்களிப்பை நான் வணங்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்.. ராணுவ பயிற்சி பெற்ற ஊரிலேயே உயிரிழந்த பிபின் ராவத்
Tags:    

Similar News