இந்தியா
பெங்களூருவில் தறிகெட்டு ஓடிய பென்ஸ் கார்: பல வாகனத்தில் மோதிய விபத்தில் ஒருவர் பலி- 6 பேர் காயம்
பென்ஸ் கார் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக இணை கமிஷனர் பி.ஆர்.ரவிகண்தே கவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் நேற்று அதிவேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுவீத் கார்டியோ உள்பட காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்தில் பென்ஸ் காரை தவிர மேலும் தலா இரண்டு கார், ஆட்டோ, டெம்போ மற்றும் இருசக்கர வாகனம் என மொத்தம் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
பின்னர், அங்கிருந்து டிரைவர் காருடன் தப்பிக்க முயன்றபோது மீண்டும் மற்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், பென்ஸ் காரை ஓட்டி வந்த 43 வயதான சுவீத் கார்டியோ பலத்த காயமடைந்தார்.
மேலும், இந்த விபத்தில் ஆல்டோ கார் ஓட்டுனர் ஹரிமஹந்தா (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் பென்ஸ் காரை தவிர மேலும் தலா இரண்டு கார், ஆட்டோ, டெம்போ மற்றும் இருசக்கர வாகனம் என மொத்தம் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
விபத்து குறித்து பெங்களூரு அல்சூர் போக்குவரத்து காவல் எல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் இணை கமிஷனர் பி.ஆர்.ரவிகண்தே கவுடா கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்.. பாம்புக்கு பயந்து ரூ.12 கோடி வீட்டை கொளுத்திய தொழிலதிபர்