இந்தியா
சவுதி அரேபியாவில் கார் விபத்து- கேரள தம்பதி உள்பட 5 பேர் உயிரிழப்பு
சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே கேரள தம்பதி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம்:
சவுதி அரேபியாவில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு மருத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இங்குள்ள பிசா மாகாணத்தில் கேரள மாநிலம் கோழிக்கோடு பேபோர் பகுதியை சேர்ந்த முகமது ஜபீர் (வயது 48) தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவர் அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜூபைல் பகுதியில் இருந்து ஒரு காரில் ஜிசான் நகரத்திற்கு மனைவி சப்னா (36), மற்றும் குழந்தைகள் சைபா (7), சகா (5), மற்றும் கைக்குழந்தை லட்பி ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது காரை முந்தி செல்ல முயன்ற மற்றொரு கார் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முகமது ஜபீர், சப்னா மற்றும் குழந்தைகள் 3 பேரும் பரிதாபமாக பலியாகினர்.
இதுதொடர்பாக ஜிசான் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் கூறுகையில், முகமது ஜபீர் ஜிசான் நகருக்கு வேலை இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அவர் குடும்பத்துடன் அங்கு காரில் சென்றார். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி குடும்பத்துடன் பலியாகி விட்டனர் என்றனர்.
சவுதி அரேபியாவில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு மருத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இங்குள்ள பிசா மாகாணத்தில் கேரள மாநிலம் கோழிக்கோடு பேபோர் பகுதியை சேர்ந்த முகமது ஜபீர் (வயது 48) தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவர் அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜூபைல் பகுதியில் இருந்து ஒரு காரில் ஜிசான் நகரத்திற்கு மனைவி சப்னா (36), மற்றும் குழந்தைகள் சைபா (7), சகா (5), மற்றும் கைக்குழந்தை லட்பி ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது காரை முந்தி செல்ல முயன்ற மற்றொரு கார் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முகமது ஜபீர், சப்னா மற்றும் குழந்தைகள் 3 பேரும் பரிதாபமாக பலியாகினர்.
இதுதொடர்பாக ஜிசான் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் கூறுகையில், முகமது ஜபீர் ஜிசான் நகருக்கு வேலை இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அவர் குடும்பத்துடன் அங்கு காரில் சென்றார். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி குடும்பத்துடன் பலியாகி விட்டனர் என்றனர்.