இந்தியா
மக்களுக்கு வலி மற்றும் இழப்பு என வரும்போது மத்திய அரசு தூங்குகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உண்மையான விவரத்தை வெளியிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
மேலும், கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்து, இந்த வைரசைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததை மக்களிடம் இருந்து மறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மக்களுக்கு வலி மற்றும் இழப்பு என வரும்போது மத்திய அரசு தூங்குகிறது. அவர்களை நாம் எழுப்புவோம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...இந்தியாவில் இன்று ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி